Oct 10, 2007

சுற்றுலா - அனுபவம் 2.

விசு 'SBI'யில் வேலை செய்து வந்ததால் அவருக்கு கிடைத்த சலுகையை பயண்படுத்தும் விதமாக இரண்டாண்டுக்கு ஒரு முறை நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருந்தோம்.

குடும்பத்தினருடன் ஊர் சுற்றும் அனுபவம் நண்பர்களுடன் செல்வதை விட முற்றிலும் வேறுபட்டது. நம் வயதில் துணையில்லாத நேரங்களில் பெரியவர்களின் துணை நாடினோம். பயணம் செய்யும் போது ஆட்டம் பாட்டம் இருக்காது. வண்டியில் அமைதியாக அமர்ந்து கொண்டு வர வேண்டும். அப்பாவுக்கு பயந்து கொண்டே 'Audio Volume'ஐ அதிக்கப்படுத்துவோம். 407 வேனில் முன்னிருக்கைக்கு நானும் ரகுவும் சண்டை போடுவோம்.

ஒரு முறை மைசூர் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு இரவு பயணித்துக்கோண்டிருந்தோம். தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் அப்பாவின் அலரல் கேட்டு எழுந்துவிட்டோம். பின்னர் தான் தெரிய வந்தது எங்களுடன் சேர்ந்து 'driver'ரும் தூங்கி விட்டார் என்பது. :) அன்று மட்டும் அப்பா சரியான நேரத்தில் சுதாரித்திருக்காவிட்டால் இன்று நான் இதை பதித்துக் கொண்டிருக்க மாட்டேன்!

No comments: