Sep 30, 2007

புது முயற்சி.

அவன்
கொஞ்சல் சிரிப்பில் காவியம் கண்டேன்!
புரியா மொழியில் கவிதைகள் வரைந்தான்!
குறும்புப் பார்வையில் குற்றம் மறந்தேன்!
இருமலோசையில் இதயம் கணத்தேன்!
இல்லா நிமிடங்கள் இரண்டென கழித்தேன்!
'அப்பா' என்றழைக்க சொர்க்கம் உணர்ந்தேன்!
மழலை மொழி மறவா வேண்டுகிறேன்!

என்ன தவம் செய்தேனோ...

No comments: