Sep 12, 2007

நட்பு - அக்கம்பக்கம்.

பள்ளக்கூடத்தில் நண்பர்கள் இருந்தாலும் விடுமுறைகளில் நேரத்தை வீண்ணடிக்க வீட்டுக்குப் பக்கத்தில் வெட்டி பசங்க யாரும் இல்லாட்டி எப்படி!

திருப்பூர் - கொங்கு நகரில் என் நண்பர்களுடன் நான் போட்ட ஆட்டம் எக்கச்சக்கம். கோழி குண்டு, கிள்ளிந்தாண்டு, திருடன் போலீஸ், மசபந்துனு,... அனைத்தும் ஒலிம்பிக்கில் இடம் பிடிக்க வேண்டிய முத்தான விளையாட்டுக்கள். சாப்பாட்டை மறந்து! வீட்டை மறந்து! முக்கியமா படிப்பை மறந்து! ;)

நண்பர்கள் ஒன்னு சேர்ந்துட்ட கண்டிப்பா குறும்புகளுக்கு பஞ்சமேயிருக்காது. 'சின்னமாயி அரசு மேல் நிலைப்பள்ளி' இரும்புக்கதவுகளை ஏறி குதித்து கிரிக்கெட் விளையாடியது, சதுரங்கத்தில் தோற்றதுக்காக காய்களை எரித்தது, சுடுகாட்டிலிருந்து எழும்புகளை எடுத்து வந்து மற்றவர்களை பயமுறுத்துவது, அண்ணனுடைய நண்பருடன் சேர்ந்து Motor Boadவிட்டு விளையாடியதில் வீட்டை மறந்தது, ... என இதுவும் ஒரு நெடுந் தொட்ர்.

திருப்பூர் - காந்தி நகரில் அருகிலிருந்தவர்கள் அனைவரும் என் அம்மாவுடன் பணிபுரிந்தவர்கள். ஆதனாலொ என்னவோ வயதாக ஆக போட்டி, பொறாமையும் அதிகரித்தது. நண்பர்களாயிருந்தவர்கள் காலப்போக்கில் அந்நியனானார்கள். பகல் என்று ஒன்று இருந்தால் இரவு என்று ஒன்று இருக்கவேண்டுயாதுதான்!

No comments: