Nov 10, 2007

மாறாதக்கோட்டை!!!

கதை:
ஹீரோ ஒரு தாதாவின் அடியாட்களை அடித்து விட தாதா அவனை பழி வாங்க தொரத்துகிறான். (சண்டைக்கோழி 2?). நீதிமன்ற ஆனையின் படி காவல் நிலையத்தில் கையெழுத்திட மலைக்கோட்டை வந்த ஹிரோ காதல், இன்னொரு வில்லன் என பல சவால்களை தாண்டி சுபம்.

புதுமை:
சுபத்திற்கு பின் வந்த காட்சிகள். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எப்படி மாறினார்கள் என்று காட்டியது புதுமையாகவும், நன்றாகவும் இருந்தது. 'Climax'ல் வில்லனை சுட்டதிற்கு போலீஸ் சித்தப்பா கூறிய காரணத்திற்கு audience மத்தியில் கை தடடல் உறுதி.

சொதப்பல்:
விசால் புதிதாக 'Comedy' செய்ய முயற்சி செய்திருந்தாலும் அவர் 'body languages'கு இந்த வகை 'comedy' ஒந்து வரவில்லை.

மாறாத பழமை:
1) 'இவனை அடக்க ஒரு ஆம்பிள்ளை வருவான்' என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறியவுடன் ஹீரோவின் அறிமுகப் பாடல்.
2) சின்ன பொடியன் ஒருவனை அழைத்துக்கொண்டு ஹீரோ ஹீரோயினை தேடுவது.
3) காதலில் தோற்றவன் தன் குழந்தைக்கு காதலியின் பெயரை வைப்பது. (வேற வழியே இல்லையா?)

ஆக மொத்ததில் 'மலைக்கோட்டை' புதிய கல்லில் புளித்துப்போன பழைய மாவு. ஆனாலும் ரூசிக்கத்தான் செய்கிறது.

No comments: