Jul 21, 2008

சற்றே சிந்தியுங்கள்

வியாபார நிமித்தமாக வெளி மாநிலத்துக்கோ வேறு தேசத்துக்கோ போகும் பொழுது அங்குள்ள வட்டார மொழியை கற்று தொழில் செய்வது ஒரு வியாபார தந்திரமாகவே ஒரு காலத்திலிருந்தது. இப்படியிருக்கையில் வியாபாரம் செய்ய நம் தேசம் வந்த ஆங்கிலேயின் மொழியை நாம் ஏன் கற்றோம்?

ஆங்கிலத்தை ஆங்கிலேயனுக்கு அடுத்த படியாக சரியாக பேசுவது இந்தியன். பெருமைப்படுவோருக்கு ஓரு கேள்வி. உங்கள் தாய்மொழியில் உங்கள் புலமை எப்படி?

இந்தியா வளர்ச்சிக்கு ஆங்கிலம் அவசியம் தேவை என்றால் ஆங்கிலத்தின் துணையில்லாமல் வளர்ந்து நிற்கும் சப்பானையும் சீனாவையும் பாருங்கள்.

மற்ற தேசத்தினர் ஆங்கிலத்தை வியாபாரத்துக்காக கற்றால் நாம் மட்டும் கௌரவத்துக்காக கற்கிறோம். ஏன் இந்த ஆங்கில மோகம்? சற்றே சிந்தியுங்கள்!!!

No comments: